அடுத்த ஆண்டு 10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகளை வெளியிட்டார் செங்கோட்டையன்!

சென்னை: பள்ளி பொதுத் தேர்வு தேதிகளை இந்த கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம்
 

சென்னை: பள்ளி பொதுத் தேர்வு தேதிகளை இந்த கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிப்பாடம் ஒரே தாளாக மாற்றப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

19.04.2019 அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும்.
8.5.2019 அன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
29.04.2019 அன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்.

தமிழக மாணவர்கள் தேர்வெழுத, இங்கேயே நீட் தேர்வு மையங்கள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்,” என்றார்.

-வணக்கம் இந்தியா

From around the web