செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்!

காஞ்சிபுரம்: ஜோடியாக செல்ஃபி எடுக்க முயன்றபோது, கால் இடறி கிணற்றுக்குள் விழுந்த பெண் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த வருங்காலக் கணவன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். பட்டாபிராம் அருகே செல்பி மோகத்தால் திருமணமாக இருந்த மணமக்கள் கிணற்றில் விழுந்து மணமகள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினரான
 

செல்ஃபி மோகத்தால் பறிபோன உயிர்!

காஞ்சிபுரம்: ஜோடியாக செல்ஃபி எடுக்க முயன்றபோது, கால் இடறி கிணற்றுக்குள் விழுந்த பெண் உயிரிழந்தார். அவரை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த வருங்காலக் கணவன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார்.

பட்டாபிராம் அருகே செல்பி மோகத்தால் திருமணமாக இருந்த மணமக்கள் கிணற்றில் விழுந்து மணமகள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரை சேர்ந்தவர் தாஸ். இவரது மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இவரது உறவினரான பட்டாபிராம் காந்திநகரை சேர்ந்த ஸ்டெப்பி என்கிற மெர்சிக்கும் ஜனவரி மாதம் திருமணம் நடத்த முடிவு செய்து கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனிடையே இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளனர். அந்தவகையில் சென்னை வண்டலூர் – மீஞ்சூர் 400 அடி சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவர்கள் முத்தாபுதுப்பேட்டை அருகே காண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே அமர்ந்து செல்பி எடுத்துள்ளனர்.

அப்போது கால் தவறி மெர்சி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவரைப் பிடிக்க முயற்சி செய்தபோது அப்புவும் கிணற்றில் விழுந்துள்ளார். கிணற்றில் இருந்து இருவரது அலறல் சத்தம் கேட்டு அருகே வயல்வெளியில் வேலை செய்து கொண்டு இருந்த சடகோபன் என்பவர் அப்புவை காப்பற்றி பொது மக்கள் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். அதற்குள் மெர்சி தண்ணீரில் மூழ்கினார்.

பின்னர் இது குறித்து ஆவடி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த மீட்பு படையினர் சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு ஸ்டெப்பியின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரும் செல்பி மோகத்தில் விழுந்தார்களா அல்லது தற்கொலை முயற்சி செய்து கொள்ள விழுந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.A1TamilNews.com

From around the web