புள்ளிங்கோவை அடக்குவதற்காக சலூன் கடைக்கு நோட்டீஸ்!

புள்ளிங்கோ மாணவர்களைத் திருத்த புதுவகை டெக்னிக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தர்மபுரி மாவட்டம், பொன்னகரம் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முடிகளை ஒழுங்காக வெட்டிக் கொண்டு பள்ளிக்கு வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கட்டளையிட்டுள்ளனர். ஆனால், மாணவர்கள் ஒழுங்காக வைத்து வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் அப்பள்ளி ஆசிரியர் முனியப்பன் தலைமையில், அப்பகுதியில் உள்ள அனைத்து சலூன் கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அந்த நோட்டீஸில் பள்ளி மாணவர்களுக்கு
 

புள்ளிங்கோவை அடக்குவதற்காக சலூன் கடைக்கு நோட்டீஸ்!புள்ளிங்கோ மாணவர்களைத் திருத்த புதுவகை டெக்னிக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தர்மபுரி மாவட்டம், பொன்னகரம் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முடிகளை ஒழுங்காக வெட்டிக் கொண்டு பள்ளிக்கு  வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கட்டளையிட்டுள்ளனர். ஆனால், மாணவர்கள் ஒழுங்காக வைத்து வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் அப்பள்ளி ஆசிரியர் முனியப்பன் தலைமையில், அப்பகுதியில் உள்ள அனைத்து சலூன் கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அந்த நோட்டீஸில் பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு தான் முடி வெட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியர்களின் இந்த முயற்சி பெற்றோர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web