நானா திமிர் பிடித்தவள்? – மனம் திறக்கும் சாய் பல்லவி

பிரேமம் வெளியானதிலிருந்தே சாய் பல்லவி மீது அப்படி ஒரு க்ரேஸ் தமிழ் சினிமாவில். அவரை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய முன்னணி ஹீரோக்களும் விரும்பினர். ஆனால் சாய் பல்லவியோ கதைகளை, ஹீரோக்களைத் தேர்வு செய்வதில் முன்னணி் நடிகைகளையே மிஞ்சிவிட்டார். அப்படி ஒரு தெளிவு. யாரையும் மதிப்பதில்லை, சீனியர்களைக் கண்டு கொள்வதில்லை, மகா திமிர் என்றெல்லாம் சாய் பல்லவி பற்றி கோடம்பாக்கத்தில் ஒரு ‘டாக்’ ஓட ஆரம்பித்துவிட்டது. இத்தனை களேபரங்களுக்கிடையில் அவர் நடித்த முதல் தமிழ்ப்
 
பிரேமம் வெளியானதிலிருந்தே சாய் பல்லவி மீது அப்படி ஒரு க்ரேஸ் தமிழ் சினிமாவில். அவரை ஜோடியாக ஒப்பந்தம் செய்ய முன்னணி ஹீரோக்களும் விரும்பினர்.
 
ஆனால் சாய் பல்லவியோ கதைகளை, ஹீரோக்களைத் தேர்வு செய்வதில் முன்னணி் நடிகைகளையே மிஞ்சிவிட்டார். அப்படி ஒரு தெளிவு.
 
யாரையும் மதிப்பதில்லை, சீனியர்களைக் கண்டு கொள்வதில்லை, மகா திமிர் என்றெல்லாம் சாய் பல்லவி பற்றி கோடம்பாக்கத்தில் ஒரு ‘டாக்’ ஓட ஆரம்பித்துவிட்டது. 
 
இத்தனை களேபரங்களுக்கிடையில் அவர் நடித்த முதல் தமிழ்ப் படமான கரு என்கிற தியா இந்த வாரம் வெளியாகிறது. 
 
இந்தப் படத்தில் அவர் நடிக்கும்போதும் ஏகப்பட்ட கசமுசா செய்திகள் அவரைப் பற்றி. அவருக்கும் ஹீரோ நாக சவுரியாவுக்கும் லடாய் என்று கூட சொன்னார்கள். 
சாய் பல்லவியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இதையெல்லாம் கேள்விகளாக வைத்தோம்.
 
தனக்கே உரிய அந்த ஃப்ரெஷ்ஷான சிரிப்புடன் அவர் சொன்னது:
 
“வெளிநாட்டில் டாக்டருக்குப் படிச்சேன். அந்தத் தொழிலை பிராக்டீஸ் பண்ணலாம்னுதான் எனக்கு ஆசை. அந்த ஆசை தீவிரமடையும்போது இந்த சினிமாவே வேண்டாம்னு போயிடுவேன். 
 
என் இயல்பு இதுதான்… ஸோ என்னைப் பத்தி இந்த மாதிரி செய்திகள் வருவதில் ஆச்சர்யமில்லையே,” என்றார் சாய் பல்லவி.
 
படப்பிடிப்பில் சாய் பல்லவி நடந்து கொண்ட விதம் சகிக்க முடியாததாக இருந்தது. சிறிய விஷயங்களுக்கெல்லாம் கோபித்து முரட்டுத்தனமாக நடந்து கொண்டார், என்று நாக சவுரியா குற்றம்சாட்டியுள்ளாரே?  
“நான் ஏற்கெனவே இதற்கெல்லாம் மறுப்புக் கூறிவிட்டேன். நாகசவுரியாவுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. என்னைப் பற்றி, என் கேரக்டர் பற்றி மட்டும்தான் நான் கவலைப்படுவேன். அதனால் யாரையும் நான் கண்டு கொள்வதில்லை. அதனால் அப்படிச் சொல்லியிருக்கலாம்.
 
நாகசவுரியா நல்ல நடிகர். படப்பிடிப்பில் அமைதியாக இருப்பார். என்மீது அவர் புகார் கூறிய பிறகு அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அவருடன் பேச முடியவில்லை. நாகசவுரியா மட்டுமல்ல… வேறு எந்த நடிகருடனும் எனக்கு மோதல் இல்லை,” என்கிறார் சாய் பல்லவி. 
 
சினிமா பிடித்திருக்கிறதா?
 
“ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால்தான் டாக்டர் வேலையை விட்டுவிட்டு வந்திருக்கிறேன். ஆனால் எனக்குப் பிடித்த மாதிரி கதைகள் வந்தால்தான் நடிப்பது என்பதில் உறுதியாக உள்ளேன்,” என்றார்.
 
முன்னணி ஹீரோக்களைத் தவிர்க்கிறீர்களாமே?
 
“அப்படியெல்லாம் இல்லை. சூர்யா, தனுஷ் எல்லாம் முன்னணி நடிகர்கள்தானே. அவர்கள் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஹீரோக்களை விட, எனக்கான பாத்திரங்கள் ஓகே என்றால் ஒப்புக் கொள்கிறேன்,” என்றார்.
 
 

From around the web