கோபத்தின் குரல் தான் மக்கள் சக்தியின் குரல், மக்கள் தலைவரின் குரல்! அந்த முகம் கோப முகம்!!

சாத்தான் குளம் சம்பவத்திற்கு ரஜினி இப்போது தான் வருத்தம் தெரிவிப்பது போல் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது! அதற்கான ஆறுதலை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தாயுள்ளம் கொண்டு சொல்லி விட்டு அரசின் நிலைப்பாடுகளை தமிழகத்தின் சாமான்யர்கள் போல வேதனையுடன் கவனித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய காவலர் ஒருத்தர் விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டை தகாத வார்த்தைகளால் பேசும் அடாத செயல் நடக்கிறது. நீதி வேண்டி காத்திருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சில் ஈரமமும் மனதில் பாரமும் உள்ள யாருக்கும்
 

கோபத்தின் குரல் தான் மக்கள் சக்தியின் குரல், மக்கள் தலைவரின் குரல்! அந்த முகம் கோப முகம்!!சாத்தான் குளம் சம்பவத்திற்கு ரஜினி இப்போது தான் வருத்தம் தெரிவிப்பது போல் சிலர் பதிவிட்டு வருகிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது!

அதற்கான ஆறுதலை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தாயுள்ளம் கொண்டு சொல்லி விட்டு அரசின் நிலைப்பாடுகளை தமிழகத்தின் சாமான்யர்கள் போல வேதனையுடன் கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் வழக்கில் தொடர்புடைய காவலர் ஒருத்தர் விசாரிக்கும் மாஜிஸ்திரேட்டை தகாத வார்த்தைகளால் பேசும் அடாத செயல் நடக்கிறது. நீதி வேண்டி காத்திருக்கும் இந்த தருணத்தில் நெஞ்சில் ஈரமமும் மனதில் பாரமும் உள்ள யாருக்கும் ஆவேசம் வரத் தான் செய்யும்.

நீதி மன்றத்தையே வந்து பார் என்று கேட்கும் ஆணவம் மனசாட்சி உள்ள யாரையும் உலுக்கவே செய்யும். அட தப்பு பண்ணவன் தப்பிச்சுருவானோ என்ற பதைபதைப்பும் கடும் கோபமும் எல்லா சாமான்யர்களுக்கும் வரத் தான் செய்யும்.

அந்த கோபத்தின் குரல் தான் மக்கள் தலைவரின் குரல், மக்கள் சக்தியின் குரல். அந்த முகம் கோப முகம், உங்களில் அக்கிரமம் கண்டு கொதிக்கும் மக்கள் சக்தியின் கோப முகம்!

#JusticeforJayarajAndFenix
#மக்கள் தலைவர்ரஜினிகாந்த்
#சத்தியமா_விடவே_கூடாது 

– தேவ்நாத்

 

From around the web