குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடக்க வேண்டும்! – ரஜினிகாந்த்

சென்னை: தர்பார் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையிலிருந்து நேற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரைச் சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும். மத்தியில் அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள் என நம்புகிறேன். நடிகர் சங்க தேர்தலில்
 


சென்னை: தர்பார் படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையிலிருந்து நேற்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க மழைநீரை சேகரிக்க வேண்டும். இதற்காக உடனடியாக ஏரி, குளங்கள் உள்பட நீர்நிலைகளை தூர்வாரவேண்டும். மழை வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் சரிசெய்து வைத்து மழைநீரைச் சேமிக்கவேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் செய்யப்படவேண்டும்.

மத்தியில் அரசு இப்போதுதான் பொறுப்பேற்று உள்ளது. நதிநீர் இணைப்புகளை நிச்சயமாக செய்வார்கள் என நம்புகிறேன்.

நடிகர் சங்க தேர்தலில் வாக்குசீட்டு உரிய நேரத்தில் எனக்கு கிடைக்கவில்லை. வாக்களிக்காதது எனக்கு வருத்தம்தான். ஏதோ தவறு நடந்து இருக்கிறது,” என்றார்.

 

From around the web