அரசியலுக்காக ரசிகர்களை கை விடுவதா?… “நெவர்”… ரஜினிகாந்த் உறுதி!

அரசியலுக்காக ரசிகர்ளை ஒரு போதும் கைவிட மாட்டேன். அப்படி ஒரு அரசியல் செய்யத் தேவையில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடைகளில் பேசும் போதெல்லாம் “என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களே” என்று குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். தற்போது அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அக்கட்சியின் இந்துத்துவா கொள்கைகளுக்கு துணை போகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எதிர் தரப்பினரால் முன் வைக்கப்படுகிறது. சமீபத்தில் ”திருவள்ளுவரும் மாட்ட மாட்டார் நானும் மாட்ட மாட்டேன்”
 

அரசியலுக்காக ரசிகர்களை கை விடுவதா?… “நெவர்”… ரஜினிகாந்த் உறுதி!ரசியலுக்காக ரசிகர்ளை ஒரு போதும் கைவிட மாட்டேன். அப்படி ஒரு அரசியல் செய்யத் தேவையில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடைகளில் பேசும் போதெல்லாம் “என்னை வாழவைக்கும் தெய்வங்களான  ரசிகர்களே” என்று குறிப்பிட்டுப் பேசுவது வழக்கம். தற்போது அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அக்கட்சியின் இந்துத்துவா கொள்கைகளுக்கு துணை போகிறார் என்ற குற்றச்சாட்டுகள் எதிர் தரப்பினரால் முன் வைக்கப்படுகிறது.

சமீபத்தில் ”திருவள்ளுவரும் மாட்ட மாட்டார் நானும் மாட்ட மாட்டேன்” என்று அதிரடியாகச் சொல்லி நான் பாஜகவுக்கு ஆதரவானவன் அல்ல என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும் தெளிவு படுத்தினார். ஆனாலும், அவருடைய ரசிகர்களாக உள்ள இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் மத்தியில் கடந்த ஓராண்டு காலமாகவே ஒரு வித அச்சமும், பதட்டமும் நிலவி வருவதை உணர முடிகிறது.

இந்நிலையில் தமிழருவி மணியன் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து நீண்ட பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

”எந்த நிலையிலும் சிறுபான்மை, தலித் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்ற விஷயத்தில் ரஜினிகாந்த் தெளிவாக இருக்கிறார். என் ரசிகர்களிலேயே பெரும்பான்மையானவர்கள் தலித் மற்றும் சிறுபான்மையினராகத்தான் இருக்கிறார்கள். அவர்களைக் கைவிட்டுவிட்டு அரசியல் செய்யும் அவசியம் நமக்கு இல்லை’ என்று என்னிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்,’’ என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக தமிழருவி மணியனை பொதுவெளியில் காண முடியாததாலும், ரஜினி அரசியல் பற்றி அவர் கருத்துக்கள் தெரிவிக்காமல் இருந்ததாலும்,  சிறுபான்மை சமுதாய ரசிகர்கள் மத்தியில் பாஜக தான் ரஜினியை வழி நடத்துகிறதோ என்ற கருத்துக்கள் உலவி வந்தது. சமீபகாலங்களில் தமிழருவி மணியன் மீண்டும் ரஜினி அரசியல் பற்றி பேட்டிகள் கொடுத்து வருவது சோர்வடைந்து இருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டியுள்ளது. 

சிறுபான்மை ரசிகர்களை ரஜினிகாந்த் ஒரு போதும் கைவிட மாட்டார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web