அரசியலுக்கு தனித்தே வருவார் ரஜினிகாந்த் – சு.திருநாவுக்கரசர் எம்.பி.!

நெல்லை: ரஜினிகாந்த் அரசியலுக்கு தனித்தே வருவார் என்று முன்னாள் அமைச்சர். சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார். நாங்குனேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், திருச்சி எம்.பியுமான சு.திருநாவுக்கரசர் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக கூறும்போது, “ரஜினிகாந்த் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி போல் எந்தக் கட்சியிலும் சேர்ந்து, யாருக்கு கீழேயும் அவரால் பணியாற்ற முடியாது. துணையாக இருக்க முடியாது. கட்சி ஆரம்பித்தால் தனியாகத் தான் ஆரம்பிப்பார்,”
 

அரசியலுக்கு தனித்தே வருவார் ரஜினிகாந்த் – சு.திருநாவுக்கரசர் எம்.பி.!

நெல்லை: ரஜினிகாந்த் அரசியலுக்கு தனித்தே வருவார் என்று முன்னாள் அமைச்சர். சு.திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நாங்குனேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், திருச்சி எம்.பியுமான சு.திருநாவுக்கரசர் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக கூறும்போது, “ரஜினிகாந்த் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சி போல் எந்தக் கட்சியிலும் சேர்ந்து, யாருக்கு கீழேயும் அவரால் பணியாற்ற முடியாது. துணையாக இருக்க முடியாது. கட்சி ஆரம்பித்தால் தனியாகத் தான் ஆரம்பிப்பார்,” என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் தமிழ்நாடு பாஜக தலைவர் ஆவார் என்று முன்பு ஊடகங்கள் பேசிய போது, அகில இந்திய பாஜக தலைவர் பதவி கொடுத்தால் கூட அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று கூறியவர் சு.திருநாவுக்கரசர்.

ரஜினியும் திருநாவுக்கரசரும் நீண்டகால நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

– வணக்கம் இந்தியா

From around the web