சத்தியமா விடவே கூடாது! சாத்தான்குளம் மரணங்களுக்கு நீதி கேட்டு ரஜினிகாந்த் ஆவேசம்!!
சாத்தான்குளம் தந்தை மகன் மரணங்களுக்கு ரஜினிகாந்த் அமைதியாக இருக்கிறார் என்று குற்றம் சாட்டியவர்களுக்கு சுளீர் என்று மிகவும் ஆவேசமான பதிலை அளித்துள்ளார் ரஜினிகாந்த்
”தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் , பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. சத்தியமாக விடவே கூடாது,” என்று ட்விட்டர் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
அறிக்கையுட்ன வெள்ளை தாடியில் கையில் காப்பு அணிந்து மிகவும் ஆவேசமாக காட்சியளிக்கும் தற்போதைய படத்தையும் பகிர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.