தந்தை எஸ்.ஏ.சி யை கண்டிப்பாரா விஜய்? ரஜினி ரசிகர்கள் ஆவேசம்!

ரஜினிகாந்த் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறி வருவது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தையின் பேச்சுக்களை கேட்டும் கேட்காதது போல் இருக்கிறாரா? அல்லது அவருடைய சம்மதத்தின் பெயரில் தான் எஸ்.ஏ.சி பேசுகிறாரா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இது சம்மந்தமாக நீண்டநாட்களாக ரஜினி ரசிகர்களாக பொதுவெளியில் அறியப்படும் சிலரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம். “எஸ்.ஏ.சியின் பேச்சுக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று விஜய் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
 

தந்தை எஸ்.ஏ.சி யை கண்டிப்பாரா விஜய்? ரஜினி ரசிகர்கள் ஆவேசம்!ஜினிகாந்த் தமிழக மக்களுக்கு விரோதமாக செயல்படுகிறார் என்று இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறி வருவது ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையின் பேச்சுக்களை கேட்டும் கேட்காதது போல் இருக்கிறாரா? அல்லது அவருடைய சம்மதத்தின் பெயரில் தான் எஸ்.ஏ.சி பேசுகிறாரா? என்றும் கேள்வி எழுப்புகிறார்கள். இது சம்மந்தமாக நீண்டநாட்களாக ரஜினி ரசிகர்களாக பொதுவெளியில் அறியப்படும் சிலரிடம் தொடர்பு கொண்டு கேட்டோம்.

“எஸ்.ஏ.சியின் பேச்சுக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று விஜய் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அல்லது மவுனம் சம்மதம் என்பது போல் விஜய்க்கு தெரிந்தே அவருடைய தந்தை பேசுகிறார் என்று தான் கருத வேண்டியுள்ளது.

ரஜினியை என்னுடைய தலைவர் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி திரைத்துறையில் வளர்ந்தவர் விஜய். ரஜினியும் பெருந்தன்மையுடன் விஜய்யின் வளர்ச்சிக்கு ஆலோசனைகளும் ஆதரவும் அளித்தவர். எஸ்.ஏ.சந்திரசேகரனும் ரஜினி மீது நன்மதிப்பு கொண்டவர் தானே. எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவின் போது எஸ்.ஏ.சி எங்கள் தலைவரிடம் எப்படி நடந்து கொண்டார் என்று நேரடியாகவே பார்த்தோமே!

தமிழக அரசியல் களம் ரஜினிக்கும் ஸ்டாலினுக்குமான போட்டியாக உருவெடுத்துள்ளது. இது வரையிலும் தமிழராகத் தெரிந்த ரஜினி,  இப்போது எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு  தமிழின விரோதியாக மாறிவிட்டார். அவருடைய பேச்சுக்கள் கடந்த காலத்தில் விஜய்க்குத் தான் வினையாக முடிந்து வந்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கே எஸ்.ஏ.சியின் பேச்சுக்கள் பிடிக்கவில்லை என்பது தான் உண்மை. விஜய் ரசிகர்கள் என்ன வெளிமாநிலத்திலிருந்தா வந்து விட்டார்கள்?. எல்லோரும் எங்கள் தம்பிகளும், மாமன், மச்சான், அண்ணன்மார் பிள்ளைகளும் தானே!. அவர்களுக்கு எங்கள் தலைவர் ரஜினி மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. தலைவர் முதல்வர் ஆகவேண்டும் என்று தான் சொல்கிறார்கள். ஆனால் எஸ்.ஏ.சி யாருடைய தூண்டுதல் பேரிலோ ரஜினிக்கு எதிராக பேசி வருகிறார். இதை விஜய் ரசிகர்களும் உணர்ந்துள்ளார்கள் என்பது தான் மகிழ்ச்சியான விஷயம்.

யாரோ விரித்த வலையில் எஸ்.ஏ.சி சிக்கி விட்டார். ஆனால் விஜய் சிக்காமல் இருக்க வேண்டும். தந்தையின் பேச்சுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவிப்பதன் மூலம் இதற்கு முடிவு கட்ட முடியும். செய்வாரா விஜய்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

http://www.A1TamilNews.com

From around the web