சுஜித் மரணத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல்!
80 மணி நேரத்திற்கு மேலாகப் போராடியும் ஆழ்துளை கிணற்றிலிருந்து உயிருடன் மீட்க முடியாத சிறுவன் சுஜித் வில்சன் மரணத்திற்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டர் மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளதாவது,
”சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுஜீத்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
— Rajinikanth (@rajinikanth) October 29, 2019
லதா ரஜினிகாந்தும் இரங்கல் தெரிவித்துள்ளாா். சுஜித்தின் இறுதி நேர தவிப்பை வார்த்தைகளில் விளக்க முடியாது; குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளாா். இந்த குழு அமைப்பது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
– வணக்கம் இந்தியா