அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறதா? பட வெளியீடு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக, சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கொரோனா ஊரடங்கு உத்தரவால், அடுத்தக் கட்ட படப்பிடிப்பை தொடங்க முடியாத நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகளுடன் தான் திரையரங்குகள் திறக்கப்படும் என்றாலும், முற்றிலுமாக முடங்கியுள்ள சினிமாத் தொழில் மெல்ல மெல்ல செயல்படத் தொடங்கும் என் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படப்
 

அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறதா? பட வெளியீடு எப்போது?சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பாக, சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

கொரோனா ஊரடங்கு உத்தரவால், அடுத்தக் கட்ட படப்பிடிப்பை தொடங்க முடியாத நிலையில் இருக்கிறது. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டுப்பாடுகளுடன் தான் திரையரங்குகள் திறக்கப்படும் என்றாலும், முற்றிலுமாக முடங்கியுள்ள சினிமாத் தொழில் மெல்ல மெல்ல செயல்படத் தொடங்கும் என் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாரதிராஜா தலைமையில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர். 60 பேர் கொண்ட குழுவுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

அண்ணாத்த படத்திற்கு சென்னையில் புதிதாக செட்கள் அமைக்கப்பட்டு சென்னையிலேயே மீதிப் படப்படிப்பை முடித்துவிடும் வகையில் திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபருக்குள் படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. திட்டமிட்டபடியே பொங்கலுக்கு அண்ணாத்த படத்தை வெளியிடும் முயற்சியில் சன் பிக்சர்ஸ் உறுதியாக உள்ளதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாகவும், வாங்கிய சம்பளத்தை திருப்பித் தருவதாக ரஜினிகாந்த் சொன்னதாகவும் சிலர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.

A1TamilNews.com

From around the web