கல்லெடுத்து எறிவோம்… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சமீபத்தில் இந்து தீவிரவாதம் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கல்லெடுத்து எறிவோம் என்று பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “அ.தி.மு.க.,வினர் காந்தி கையைப் பிடித்து வந்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர்., கையைப் பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடு தான் இருப்போம். அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது, அ.தி.முக.காரர்கள். அ.தி.மு.க காரன்
 

கல்லெடுத்து எறிவோம்… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!மீபத்தில் இந்து தீவிரவாதம் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கல்லெடுத்து எறிவோம் என்று பேசியுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

 

“அ.தி.மு.க.,வினர் காந்தி கையைப் பிடித்து வந்தவர்கள் அல்ல. எம்.ஜி.ஆர்., கையைப் பிடித்து வந்தவர்கள். அதனால் வீரத்தோடு தான் இருப்போம்.

அமைதியாக இருக்க நாங்கள் காங்கிரஸ்காரர்கள் கிடையாது, அ.தி.முக.காரர்கள். அ.தி.மு.க காரன் விசில் அடிப்பான், சவுண்டு விடுவான், தேவைப்பட்டால் கல்லெடுத்தும் எறிவான்.” 

அ.தி.மு.க வினர் கல்லெடுத்து எறிவார்கள் என்று அமைச்சர் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமைச்சரவை கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேச்சுகள் குறித்து சக அமைச்சர்கள் அதிருப்தியை தெரிவித்ததாக செய்திகள் வந்தது. 

ரஜினிகாந்த் கட்சிக்கு போவார் என்று பரவலாக பேசப்படும் நிலையில் தன் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கட்டும் என்பதற்காக இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசுகிறாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  என்ற கேள்வியும் எழுகிறது.

http://www.A1TamilNews.com

From around the web