அன்பினால் மோடி-அமித்ஷா வை வீழ்த்துவோம்… இளைஞர்களுக்கு ராகுல் அழைப்பு!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை , சக இந்தியர்கள் மீது நாம் செலுத்தும் அன்பினால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில் இளைஞர்களுக்கு ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ”அன்பான இந்திய இளைஞர்களே. மோடியும், அமித் ஷாவும் உங்கள் எதிர்காலத்தை சிதைத்து விட்டார்கள். நாட்டில் நிலவும் வேலையின்மை, இந்தியப் பொருளாதாரத்தை
 

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை , சக இந்தியர்கள் மீது நாம் செலுத்தும் அன்பினால் மட்டுமே வீழ்த்த முடியும் என்று இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில்  இளைஞர்களுக்கு ராகுல் காந்தி ட்விட்டர் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

”அன்பான இந்திய இளைஞர்களே.

மோடியும், அமித் ஷாவும் உங்கள் எதிர்காலத்தை சிதைத்து விட்டார்கள். நாட்டில் நிலவும் வேலையின்மை, இந்தியப் பொருளாதாரத்தை பாழ்படுத்திய காரணங்களுக்காக உங்களுடைய கோபத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருவரும் இருக்கிறார்கள்.

அதனாலேயே, பரஸ்பர அன்பு காட்டும் நம்முடைய  இந்தியாவை துண்டாடி, வெறுப்புக்குப் பின்னால் ஒளிகிறார்கள். சக இந்தியர்கள் மீது காட்டும் நம்முடைய அன்பினால் மட்டுமே அவர்கள் இருவரையும் நாம் வெல்ல முடியும்,” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

https://www.A1TamilNews.com

From around the web