புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநராக கிரண் பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப் படும் அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார். மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கிரண்பெடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு
 

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஆளுநராக கிரண் பெடி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.

புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அரசால் கொண்டுவரப் படும் அனைத்து திட்டங்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஆனால் கிரண்பெடி அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அனுமதி தரவில்லை என்று முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டி வந்தார். 

மக்கள் நலத்திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருவதாக கிரண்பெடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி கவர்னர் மாளிகை முன்பு நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் இறங்கினார். மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு  தொண்டர்களுடன் விடிய விடிய நாராயணசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் 2வது நாளாக தொடர்கிறது!

இரவு உணவை சாலையில் அமர்ந்தே சாப்பிட்டார் முதல்வர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளனர். கிரண் பேடி க்கு எதிராக மாநிலம் முழுக்க போராட்டங்கள் நடக்கின்றன.

2-வது நாளாக போராட்டம் நீடித்து வரும் நிலையில், சென்னை, நெய்வேலியில் இருந்து அதிவிரைவுப்படை,  மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவை வரவழைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று  மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளது. 

– வணக்கம் இந்தியா

From around the web