விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பிரிட்டோ!

இளைய தளபதி விஜய்யின் அடுத்தபடமான மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வர தயாராக இருக்கிறது. இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், மாளவிகா மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், கௌரி கிஷன் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் பாடல்கள் வெளியான நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் பரவிய கொரானா காரணமாக
 

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் பிரிட்டோ!ளைய தளபதி விஜய்யின் அடுத்தபடமான மாஸ்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வர தயாராக இருக்கிறது. இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், மாளவிகா மோகனன், சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், கௌரி கிஷன் போன்ற எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசையமைப்பில் பாடல்கள் வெளியான நிலையில் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் பரவிய கொரானா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோவிடம் ரிலீஸ் தேதி குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு விளக்கமளித்தார். அதன்படி மாஸ்டர் கண்டிப்பாக திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்படும். ஓடிடியில் வெளியாகாது.

சூழ்நிலையைப் பொறுத்து தீபாவளியா அல்லது பொங்கலா என முடிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் தளபதி விஜய்யின் படம் 2020 தீபாவளி அல்லது 2021 பொங்கலுக்கு வெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி வருகிறது.

A1TamilNews.com

From around the web