சிறையிலிருக்கும் கைதிகள் கூண்டோடு தற்கொலை முயற்சி!

திருச்சி: மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பேர் நஞ்சருந்தி கூட்டாக தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 70 பேர் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்றது, போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை திருடியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக 70 பேரும் கைது செய்யப்பட்டனர். தங்களை சட்டவிரோதமாக
 

திருச்சி: மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த 20 பேர் நஞ்சருந்தி கூட்டாக தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை, வங்கதேசம், பல்கேரியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 70 பேர் திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு தப்ப முயன்றது, போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை திருடியது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதற்காக 70 பேரும் கைது செய்யப்பட்டனர்.

தங்களை சட்டவிரோதமாக முகாமில் அடைத்து வைத்திருப்பதாகவும், தண்டனை காலம் நிறைவடைந்த பிறகும் விடுவிக்க மறுப்பதாகவும் கூறி 70 பேரும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 20 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சிகிச்சைக்காக 20 பேரும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

https://www.A1TamilNews.com

From around the web