அதிர்ச்சி! சென்னையில் 200க்கும் மேற்பட்ட  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 587பேர். சென்னையில் இதுவரை 10576பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர சென்னையில் மட்டும் 204 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதனால் சென்னையை பொறுத்த வரை கட்டுப்பாடுகள்
 

அதிர்ச்சி! சென்னையில் 200க்கும் மேற்பட்ட  கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 587பேர். சென்னையில் இதுவரை  10576பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சென்னையில் மட்டும் 204 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதனால் சென்னையை பொறுத்த வரை கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் எனவும் பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாதந்தோறும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் பிரசவ தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக அனைத்து கர்ப்பிணிகளுக்கும் கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.A1TamilNews.com

From around the web