காதலனை துரத்திவிட்டு காதலியிடம் அத்துமீறிய காவல்துறை! என்னங்க சார் உங்க சட்டம்…
தூத்துக்குடி மாவட்டத்தில் காதலனை மிரட்டி துரத்திவிட்டு காதலியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலரும் அவரது நண்பரும் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 16 வயது மாணவியும் 17 வயது மாணவரும் ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் சசிகுமாரும் அவரது நண்பர் பாலமுருகனும் அங்கு சென்றுள்ளனர். மாணவரும் மாணவியும் பேசிக் கொண்டிருந்ததை செல்போனில் படம் பிடித்த அவர்கள், அதைக்காட்டி மிரட்டியுள்ளனர்.
மாணவரை அங்கிருந்து விரட்டிய சசிகுமாரும் பாலமுருகனும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் சசிகுமார் மற்றும் பாலமுருகனை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர் ஒருவரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.