பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் !சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவைத் தடுக்க கண்டுப்பிடிக்கபட்டு பரிசோதனையில் உள்ள மருந்துகள் விற்பனைக்கு வர அடுத்த ஆண்டு ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பெயரைப் பயன்படுத்தி பல வணிக நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை உள்ள ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ எனப் பெயரிட்டுள்ளது. கொரோனில் என்ற பெயருக்கான வணிகச்சின்னத்தையும்
 

பதஞ்சலி நிறுவனத்திற்கு  ரூ.10 லட்சம் அபராதம் !சென்னை உயர்நீதிமன்றம்  அதிரடி உத்தரவு!நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவைத் தடுக்க கண்டுப்பிடிக்கபட்டு பரிசோதனையில் உள்ள மருந்துகள் விற்பனைக்கு வர அடுத்த ஆண்டு ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பெயரைப் பயன்படுத்தி பல வணிக நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் சென்னை உள்ள ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ எனப் பெயரிட்டுள்ளது. கொரோனில் என்ற பெயருக்கான வணிகச்சின்னத்தையும் 2027 வரை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு கொரோனில் என பெயர் சூட்டியுள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன.

இதனால் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னம் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனு தாக்கல் செய்திருந்தன.

வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்துள்ளது.

மருந்தை உறுதி செய்யாமல் அங்கீகாரம் பெறாமல் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கியதால் பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கொரோனாவை குணப்படுத்தாது எனவும் உயர்நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.

A1TamilNews.com

From around the web