இந்தியாவில் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்! தயார் நிலையில் ராணுவம்!

இந்தியா , சீனா எல்லை பிரச்சனைகளுக்கு தற்போது தான் முடிவு காணப்பட்டு சிறிது, சிறிதாக படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் சுதந்திர தினம், ஈகைத்திருநாள், ரக்சா பந்தன் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள் வர இருக்கின்றன. இந்த வேளையில் இந்தியாவில் ஊடுருவுவதற்காக 320க்கு அதிகமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்காக எல்லையில் 27 சிறப்பு
 

இந்தியாவில்  ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டம்! தயார் நிலையில் ராணுவம்!ந்தியா , சீனா எல்லை பிரச்சனைகளுக்கு தற்போது தான் முடிவு காணப்பட்டு சிறிது, சிறிதாக படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் எல்லைப்பகுதி வழியாக பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் சுதந்திர தினம், ஈகைத்திருநாள், ரக்சா பந்தன் போன்ற தேசிய அளவிலான பண்டிகைகள் வர இருக்கின்றன. இந்த வேளையில் இந்தியாவில் ஊடுருவுவதற்காக 320க்கு அதிகமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும், இதற்காக எல்லையில் 27 சிறப்பு தளங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

எல்லைப் பகுதியில் நடைபெற்று வரும் தகவல் பரிமாற்றங்களை இடைமறித்து கேட்டதன் மூலம் இந்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. எல்லைப் பகுதிகளில், தீவிரவாதிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், ஊடுருவல்களை தவிர்க்கவும் தயார் நிலையில் இருக்கும் படி இந்திய ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web