ஜிஎஸ்டி டிமானிடைசேஷன் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்!
டிமானிடைசேஷனும், தப்பும் தவறுமான ஜிஎஸ்டியும் அதை அமல்படுத்திய தவறான முறைகளும் தான் இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ட்விட்டர் மூலம் அவர் கூறியுள்ளதாவது,
“தப்பும் தவறுமான ஜிஎஸ்டி தான பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கடைசியில் ஒப்புக்கொண்டுள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட தவறான முறைகளும் அதற்கு காரணம். டிமானிடைசேஷனை பொருளாதார ஆலோசகர் மறந்து விட்டார்,” என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
I have asked my family to tweet on my behalf the following :
Finally, PM's Economic Advisor has admitted that a flawed GST (and its faulty implementation) was the main cause of the economic slowdown.
He forgot demonetisation.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 14, 2019
எனது குடும்பத்தினரை எனது சார்பாக இந்த ட்வீட் செய்யக் கேட்டுக் கொண்டுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
– வணக்கம் இந்தியா