மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறித்த தகவல்களை செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்து வரும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் திறம்பட பதிலளித்து வருகிறார். அரசியல் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கூட சாமர்த்தியமாக எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் தொற்று நோய் குறித்த புள்ளிவிவரங்களுடனும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பதிலளிக்கிறார். இன்று பீலா
 

மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!மிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பரவல் குறித்த தகவல்களை செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்து வரும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் திறம்பட பதிலளித்து வருகிறார்.

அரசியல் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கூட சாமர்த்தியமாக எந்த அரசியல் கலப்பும் இல்லாமல் தொற்று நோய் குறித்த புள்ளிவிவரங்களுடனும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் பதிலளிக்கிறார்.

இன்று பீலா ராஜேஷ் என்ன சொல்கிறார் என்று மக்களிடமும் அவருடைய அறிக்கையை எதிர்நோக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பீலா ராஜேஷை பாராட்டியுள்ளார்.

“தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலாளர் தெளிவாகவும் தன்னம்பிக்கையடனும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிப்பது பாராட்டிற்குரியது!,” என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பீலா ராஜேஷை பாராட்டியுள்ளார் ப.சிதம்பரம்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் திறம்பட செயல்பட்டு வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி டாக்டர். பீலா ராஜேஷ்-க்கு எதிர்காலத்தில் முக்கியப் பதவிகளுக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

A1TamilNews.com

தொடர்புடைய செய்தி: தூத்துக்குடி தந்த முத்து பீலா ராஜேஷ்?  

From around the web