OTT தளத்தில் வெளியிடப்படும் படங்கள்,வெப் சீரிஸ்களுக்கு அனுமதி பெற வேண்டும்! பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தொடர் ஊரடங்கு காரணமாக வெப் சீரிஸ், டாக்குமென்ட்ரி, திரைப்படம் போன்றவை ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது.
இதற்கு தற்போது படங்களை, வெப்சிரீஸ் இவைகளை ஆன்லைனில் வெளியிடுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து என்ஓசி அதாவது நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ் பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்திய இராணுவ பணியாளர்கள் மற்றும் இராணுவ சீருடையை சிதைத்ததாக ஒரு வெப்சிரீசில் காட்டப்பட்டதை அடுத்து புதிதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“ராணுவ கருப்பொருளைக் கொண்ட எந்தவொரு திரைப்படம் / ஆவணப்படம் / வெப் சீரிஸ் பொது தளங்களில் வெளியிடப்படுவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும்.” என தெரிவித்துள்ளன.
பாதுகாப்புப் படைகளின் உருவத்தை சிதைத்து, பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வீரர்களின் உணர்வுகளை புண்படுத்தும் சம்பவங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ கருப்பொருளில் திரைப்படங்களை தயாரிக்கும் சில தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய இராணுவத்தின் உருவத்தை சிதைக்கும் உள்ளடக்கங்களைப் பயன்படுத்துகின்றன என்பது அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனால் இராணுவ கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் / வலைத் தொடர் போன்றவற்றின் தயாரிப்பாளர்கள் எந்தவொரு திரைப்பட / ஆவணப்பட இராணுவ கருப்பொருளையும் பொது தளத்தில் ஒளிபரப்புவதற்கு முன்பு பாதுகாப்பு அமைச்சரிடமிருந்து ‘என்ஓசி’ பெற அறிவுறுத்தப்பட வேண்டும்.
‘XXX தணிக்கை செய்யப்படாத (சீசன் -2)’ வலைத் தொடர் இந்திய ராணுவ பணியாளர்கள் மற்றும் இராணுவ சீருடையை சிதைந்த முறையில் சித்தரித்த வெப் சீரிஸின் தயாரிப்பாளர் மற்றும் OTT தளத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.