நீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது!

கிருஷ்ணகிரி: நீட் தேர்வு முறைகேடு வழக்கில், மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே 4 மாணவர்களும் அவர்களின் தந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் பிரியங்கா என்ற மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அந்த மாணவி, இடைத்தரகர் மூலம்
 

நீட் மோசடி வழக்கில் மேலும் ஒரு மாணவி கைது!கிருஷ்ணகிரி: நீட் தேர்வு முறைகேடு வழக்கில், மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் பயின்றுவந்த மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஏற்கனவே 4 மாணவர்களும் அவர்களின் தந்தைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் பிரியங்கா என்ற மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அந்த மாணவி, இடைத்தரகர் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த சிபிசிஐடி காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

From around the web