கடலூரில் வலம்வரும் நிர்வாணத் திருடன்! பகீர் பின்னணி!!

உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் சென்று திருட முயன்று, ஒருவர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். விருத்தாசலம் – வி.என்.ஆர். நகரில் உள்ள ஜமால் பாஷா தெருவில், வீடுகளில் ஜன்னல் ஓரம் வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் அடிக்கடி மாயமாகின. எப்படி காணாமல் போகின்றதென தெரியாமல் ஜமால் பாஷா தெருவில் வசிப்பவர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். திருடன் பிடிபடாத நிலையில், செல்போன், நகைகள், சின்னச்சின்ன பொருள்கள் என அவர்கள் தொடர்ந்து பறிகொடுத்தனர். இந்த நிலையில், அதே வீதியில் வசிக்கு ரம்ஜான் அலி என்பவரின்
 

கடலூரில் வலம்வரும் நிர்வாணத் திருடன்! பகீர் பின்னணி!!டம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் சென்று திருட முயன்று, ஒருவர் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.

விருத்தாசலம் – வி‌‌.என்.ஆர். நகரில் உள்ள ஜமால் பாஷா தெருவில், வீடுகளில் ஜன்னல் ஓரம் வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள் அடிக்கடி மாயமாகி‌ன. எப்படி காணாமல் போகின்றதென தெரியாமல் ‌ஜமால் பாஷா தெருவில் வசிப்பவர்கள் குழப்பத்தில் இருந்தார்கள். திருடன் பிடிபடாத நிலையில், செல்போன், நகைகள், சின்னச்சின்ன பொருள்கள் என அவர்கள் தொடர்ந்து பறிகொடுத்தனர்.

இந்த நிலையில், அதே வீதியில் வசிக்கு ரம்ஜான் அலி என்பவரின் வீட்டில் திங்களன்று அதிகாலை ஏதோ சத்தம் கேட்டு‌ அனைவரும் எழுந்தார்கள். யாரோ திரு‌ட முயன்றிருக்கிற‌ர்கள் என உணர்ந்த ரம்ஜான் அலி, தனது வீட்டின் முன்பு பொருத்தியிருந்த சிசிடிவியின் உதவியை நாடினார். அதில் பதிவான காட்சிகளைப் பார்த்த அவர், விக்கித்துப் போனார். அதில், உடம்பில் ஒட்டுத் துணி கூட‌ இல்லா‌த ஒரு நபர், கையில் பிளாஸ்டிக் பைப்புடன் வருவது பதிவாகியிருந்தது.

அதன் மூலம் வீட்டிலிருந்த பொருள்களை திருட முயற்சித்தது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது. உடனே வெளியே வந்த ரம்ஜான் அலி கூச்சலிட்டுள்ளார். இதைப்பார்த்ததும் அந்த நிர்வாண திருடன் சுவர் ஏறிக்குதித்து தப்பிச்சென்றுள்ளார். சிசிடிவி காட்சிகளைகொண்டு அந்த நிர்வாண திருடனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

From around the web