வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ‘ நோ வொர்க் நோ பே ‘ ! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு ‘ நோ வொர்க் நோ பே ‘ என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அசாதாரண சூழ்நிலையில் வேலை
Aug 10, 2020, 18:00 IST
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நியாயவிலைக் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 10 ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு ‘ நோ வொர்க் நோ பே ‘ என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் அசாதாரண சூழ்நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.