மானியம் இல்லா சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!
எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் கச்சாப் பொருட்களின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள் அன்றாடம் நிர்ணயிக்கும்.
இந்த வரிசையில் தற்போது ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி அன்று வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன.
இந்த மாதம் அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 4.50 வரை உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 2வது மாதமாக மானியம் இல்லாத சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் மானியம் இல்லாத சிலிண்டர் ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் ஒரு மானிய சிலிண்டரின் விலைல் ரூ.4.50ம், மும்பையில் ரூ.3.50 ம், சென்னையில் ரூ.4ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.