ஆண்கள் கண்ணீர்விட்டு அழுகலாம் – கிரிக்கெட் கடவுள் சச்சின்!

ஆண்கள் கண்ணீர் சிந்துவதை அவமானமாக நினைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சர்வதேச ஆண்கள் வாரத்தை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், சக ஆண்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ஆண்கள் அழக்கூடாது என காலம் காலமாக போதிக்கப்பட்டதை கடுமையாக எதிர்த்து இருக்கிறார். சிறுவயதில் தானும் அவ்வாறு தான் நம்பியதாகவும், அந்தப் பிம்பத்தை உடைக்கவே தற்போது கடிதம் எழுதுவதாகவும் அவர் கூறியுள்ளார். அழுவதால் ஒருவர் பலவீனமாகிறார்
 

ஆண்கள் கண்ணீர்விட்டு அழுகலாம் – கிரிக்கெட் கடவுள் சச்சின்!ஆண்கள் கண்ணீர் சிந்துவதை அவமானமாக நினைக்க வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சர்வதேச ஆண்கள் வாரத்தை முன்னிட்டு கிரிக்கெட் ஜாம்பவான் ‌சச்சின் டெண்டுல்கர், சக ஆண்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ஆண்கள் அழக்கூடாது என காலம் காலமாக போதிக்கப்பட்டதை கடுமை‌யாக எதிர்த்து இருக்கிறார். சிறுவயதில் தானும் அவ்வாறு தான் நம்பியதாகவும், அந்தப் பிம்பத்தை உடைக்கவே தற்போது கடிதம் எழுதுவதாகவும் அவர் கூறியுள்ளார். அழுவதால் ஒருவர் பலவீனமாகிறார் என்ற பார்வை தவறானது என கூறியுள்ள சச்சின், துயரம் மற்றும் சோகங்களை வெளிப்படுத்த தைரியம் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நாளை சுட்டிக்காட்டிய சச்சின், அப்போது ஒவ்வொரு அடி வைக்கும் போது கால்கள் மூழ்குவது போல இருந்ததாகவும், தொண்டை‌யை ஏதோ அடைப்பது போல உணர்ந்ததாகவும் எழுதியிருக்கிறார். அந்த ‌நேரத்தில் உலகிற்கு முன் கண்ணீர் விட்டு அழுததால் ஒருவித நிம்மதியை அடைந்ததாக ‌சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

மனவலிகள் ஏற்படும் போது கண்ணீரை கட்டுபடுத்தி கடினமானவர்களாக போல நடிக்க தேவையில்லை எனவும், ஆண்களே கண்ணீர் விடுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

https://www.A1TamilNews.com

From around the web