கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா? ரஜினி பாட்டை அவருக்கே போட்டுக் காட்டும் நெட்டிசன்ஸ்!

சாத்தான்குளம் சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பிரியங்கா சோப்ரா, ஷிகர் தவான் உள்ளிட்ட வட இந்திய பிரபலங்கள் கூட கண்டனம் தெரிவித்துள்ளார்கள். எழுச்சி அரசியல் என்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவம் குறித்து மௌனமாகவே இருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொலைபேசியில் ரஜினி பேசியதாக, அவருடைய மக்கள் தொடர்பாளர் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதை உறுதி செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசும் நிலையில் அவர்கள் இல்லை. இந்நிலையில் சாத்தான்குளம் போலீஸ்
 

கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா? ரஜினி பாட்டை அவருக்கே போட்டுக் காட்டும் நெட்டிசன்ஸ்!சாத்தான்குளம் சம்பவத்தில் எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். பிரியங்கா சோப்ரா, ஷிகர் தவான் உள்ளிட்ட வட இந்திய பிரபலங்கள் கூட கண்டனம் தெரிவித்துள்ளார்கள். 

எழுச்சி அரசியல் என்று பேசிய நடிகர் ரஜினிகாந்த் இந்த சம்பவம் குறித்து மௌனமாகவே இருக்கிறார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தொலைபேசியில் ரஜினி பேசியதாக, அவருடைய மக்கள் தொடர்பாளர் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதை உறுதி செய்யும் விதமாக பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசும் நிலையில் அவர்கள் இல்லை.

இந்நிலையில் சாத்தான்குளம் போலீஸ் அத்துமீறல்களை கண்டிக்காத ரஜினிகாந்தை சமூகதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். சூப்பர்ஹிட் படமான மனிதன் படத்தில் வைரமுத்து எழுதி, ரஜினி நடித்து இருந்த மனிதன் மனிதன் பாடல் வரிகளைப் போட்டே அவரை விமர்சித்துள்ளார்கள்.

”கொடுமைகண்டு கண்ணைமூடி கிடப்பவன் மனிதனா? கோபம்கொண்டு நியாயம்கேட்டு கொதிப்பவன் மனிதனா ? வாழும்போதும் செத்துசெத்து பிழைப்பவன் மனிதனா ? வாழ்ந்தபின்னும் பேரை நாட்டி நிலைப்பவன் மனிதனா ?” என்று அரசியல் விமர்சகர் டான் அசோக் ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள ஏழரை என்ற ட்விட்டர் ஹேண்டிலிருந்து ஒருவர், “இந்த பாட்டை கேக்குற நமக்கே புரட்சி பண்ணனும் தோனுதே..இந்த பாட்டை நடிச்ச நாளைய முதல்வர் சும்மா விட்டுருவாரா?” என்று கிண்டல் செய்துள்ளார்.  ரஜினி ரசிகர்களும் இந்த ட்வீட்டில் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

குஜராத் கலவரம்,இலங்கை இனப்படுகொலை நடந்தபோது அமைச்சரவைல இருந்து விலகாம இருந்தது திமுக, RSB,Dhayanithi தாழ்த்தப்பட்டவர்களை பேசரப்ப கண்டிக்காத ஸ்டாலின்… பாஜக கூட்டணி இருக்கரப்ப கோவிலுக்கு போய் பிரச்சாரம் ஆரம்பித்தவர் ஸ்டாலின்..அதுக்கு பின் அப்டி போனதே இல்ல.. #சந்தர்ப்பவாததிமுக” என்று ஒரு ரஜினி ரசிகர் பதிலளித்துள்ளார்.

ஐயா.. உண்மைல எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. யாரோ எழுதி, யாரோ பாடியதுக்கு, நான் காச வாங்கிக்கிட்டு வாய மட்டும் அசைத்ததுதான் உண்மை. மத்தபடி அது என்னன்னு கூட எனக்குத் தெரியாதுய்யா. என்ன உட்டுருங்கையா” என்று ஒருவர் ரஜினியை கேலி செய்துள்ளார்.

”மேலிட சிக்னலுக்கு வெய்ட்டிங் பாஸ். அய்யம் பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரனா இல்ல சந்திரனானு அவங்க கொடுக்குற instruction படி எதாவது சொல்லுவாரு” என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

ஒருவேளை இவர் சொன்னது மாதிரி சிக்னலுக்காகத் தான் காத்திருக்கிறாரோ ரஜினிகாந்த். இது குறித்து இனிமேல் ரஜினி கருத்து தெரிவித்தால் சிக்னல் கிடைத்து விட்டதாக கருதலாமோ?

A1TamilNews.com 

 

 

From around the web