சிங்கம்பட்டி ஜமீன் மன்னர் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் நெப்போலியன் கண்ணீர் அஞ்சலி!!

இந்தியாவின் கடைசி மன்னரான சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார். அவருக்கு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் வசித்து வரும் நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இரங்கல் செய்தியில் நெப்போலியன் கூறியிருப்பதாவது, “எனது திருநெல்வேலி ரசிகர்மன்றத் தலைவர் காந்திபாண்டியன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்த செய்தியைப் படித்தவுடன் மனது பதைபதைத்தது
 

சிங்கம்பட்டி ஜமீன் மன்னர் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் நெப்போலியன் கண்ணீர் அஞ்சலி!!ந்தியாவின் கடைசி மன்னரான சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார். அவருக்கு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அமெரிக்காவில் வசித்து வரும் நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், சிங்கம்பட்டி ராஜா முருகதாஸ் தீர்த்தபதியின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி  செலுத்தியுள்ளார். இரங்கல் செய்தியில் நெப்போலியன் கூறியிருப்பதாவது,

“எனது திருநெல்வேலி ரசிகர்மன்றத் தலைவர் காந்திபாண்டியன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜா இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை எனக்கு அனுப்பியிருந்தார். அந்த செய்தியைப் படித்தவுடன் மனது பதைபதைத்தது ..!நமது ராஜா இறந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.

உயரிய எண்ணமும் தன்னம்பிக்கையும் இறைஅருளும் கொண்ட ஜமீன் ஐயாவின் மறைவு
நம் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய இழப்பாகும். நம் நாட்டின் கடைசி மன்னர் அவர். பல சாதனைகள் செய்து வரலாற்றில் தனது வாழ்க்கையை பதியவைத்துவிட்டுச் சென்றுள்ளார். மன்னரின் மறைவு நம் மக்களுக்கு பெரும் துயராகும்.பேரிடியாகும்.

அவரை இழந்து வாடும் சிங்கம்பட்டி ஜமீன் மக்களின் துன்பத்தில் நான் நேரில் பங்கு கொள்ள இயலவில்லை என்பதால் எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜாவுக்கு கிடைக்கின்ற புகழ் காலத்தால் அழிக்க முடியாதது! ஐயாவின் புகழ் வாழ்க, மன்னரின் புகழ் வளர்க!. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்,” என்று கூறியுள்ளார்.

From around the web