பெண்ணின் உடலுக்குள் செலுத்தப்பட்ட ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் உடைந்த ஊசி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. சீர்காழியை சேர்ந்த பார்வதி கடந்த 9ஆம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்றபோது, சிரிஞ்ச்சிலிருந்து நழுவிய ஊசி அவரது உடலுக்குள் சென்றுவிட்டது. போதிய வருமானம் இல்லாததால், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற முடியாமல் பார்வதி தவித்து வந்தார். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை 7 பேர்
 

பெண்ணின் உடலுக்குள் செலுத்தப்பட்ட ஊசி அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சையின் போது பெண்ணின் உடலுக்குள் உடைந்த ஊசி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சீர்காழியை சேர்ந்த பார்வதி கடந்த 9ஆம் தேதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்றபோது, சிரிஞ்ச்சிலிருந்து நழுவிய ஊசி அவரது உடலுக்குள் சென்றுவிட்டது.

போதிய வருமானம் இல்லாததால், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்ற முடியாமல் பார்‌வதி தவித்து வந்தார். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை 7 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், பார்வதிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதன் விளைவாக, ஒரு மணி நேரத்தில் பார்வதி உடலிலிருந்த ஊசி அகற்றப்பட்டது.

https://www.A1TamilNews.com

From around the web