சலூன் கடைக்கு போறீங்களா! ஆதார் கார்டு எடுத்திட்டு போங்க!

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ப்யூட்டி பார்லர்கள், ஸ்பா ஆகியவையும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி சலூன் கடைகள், ப்யூட்டி பார்லர்கள், ஸ்பா உரிமையாளர்கள் அனைவருக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரையும் ஆதார் கார்டு கொண்டு வர அறிவுறுத்த வேண்டும். முடிவெட்ட, ஷேவ் செய்ய வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் இவற்றை
 

சலூன் கடைக்கு போறீங்களா! ஆதார் கார்டு எடுத்திட்டு போங்க!கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ப்யூட்டி பார்லர்கள், ஸ்பா ஆகியவையும் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி சலூன் கடைகள், ப்யூட்டி பார்லர்கள், ஸ்பா உரிமையாளர்கள் அனைவருக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரையும் ஆதார் கார்டு கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.

முடிவெட்ட, ஷேவ் செய்ய வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் இவற்றை குறித்து வைத்துக் கொண்ட பிறகே அவர்களுக்கான சேவையை செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அழகு நிலையங்கள் மற்றும் முடிவெட்டும் கடைகளில் பயன்படுத்தப்படும் மேலங்கி, துண்டு இவைகளை ஒருவருக்கு பயன்படுத்திய பொருட்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து சலவை செய்த பிறகே மற்றொருக்கு உபயோகிக்க வேண்டும்.

கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து அதன்படி அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web