டோணி இல்லன்னா நாங்க தோத்துட்டுதான் வந்து நிப்போம்! – இதான் சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் கேப்டன் எம்எஸ் டோணி விளையாடவில்லை. அவருக்கு பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற சுரெஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். மும்பை அணியின் கேப்டன் ரோஹித்
 

சென்னை: ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் கேப்டன் எம்எஸ் டோணி விளையாடவில்லை. அவருக்கு பதில் சுரேஷ் ரெய்னா கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற சுரெஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவைத் தவிர வேறு யாரும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ஆடவில்லை. ஷர்மா 67 ரன்கள் அடித்து அவுட்டானார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 23 ரன்னுடனும், பொல்லார்டு 13 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். மலிங்கா வீசிய முதல் ஓவரில் அடுத்தடுத்த இரண்டு பவுன்டரிகள் விளைசிய வாட்சன், ஓவரின் 5வது பந்தில் ஆட்டமிழந்தார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்து வந்த ரெய்னா 2 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் வீழ்ந்தார். அம்பதி ராயுடு ரன் ஏதும் எடுக்காமல் குருணால் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் முரளி விஜய் நிலைத்து நிற்க மறுபக்கம் வெட்டிவிட்ட வாழை மரம் போல விக்கெட் வீழந்த வண்ணம் இருந்தது.

கேதர் ஜாதவ் 6 ரன்னிலும், ஷொரே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய முரளி விஜய் 38 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு அடித்து விளையாடி ரன்களைச் சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மலிங்கா அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களைச் சாய்த்தார்.

இன்றை. ஆட்டம்: ராஜஸ்தான் ராயல்ஸ் Vs சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சவாய் மான்சிங் ஸ்டேடியம், ஜெய்ப்பூர், இரவு 8 மணி

– வணக்கம் இந்தியா

From around the web