காவலரின் ஷூவை துடைத்து முத்தமிட்ட எம்பி!

தெலுங்குதேசம் கட்சி முன்னாள் எம்.பி.யின் பேச்சை கண்டிக்கும் வகையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி, காவலர் ஒருவரின் ஷூவை துடைத்து முத்தமிட்டார். அனந்தப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி. திவாகர் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியினர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு தொடுத்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது காவலர்களை தனது ஷூவை துடைப்பதற்காக வைத்துக் கொள்வேன் எனப் பேசினார்.திவாகரின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும்
 

காவலரின் ஷூவை துடைத்து முத்தமிட்ட எம்பி!

தெலுங்குதேசம் கட்சி முன்னாள் எம்.பி.யின் பேச்சை கண்டிக்கும் வகையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி, காவலர் ஒருவரின் ஷூவை துடைத்து முத்தமிட்டார்.

அனந்தப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் முன்னாள் எம்.பி. திவாகர் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியினர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு தொடுத்து வருவதாக குற்றம்சாட்டியிருந்தார்.

தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது காவலர்களை தனது ஷூவை துடைப்பதற்காக வைத்துக் கொள்வேன் எனப் பேசினார்.திவாகரின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில், ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.யான கொரண்ட்ல மாதவ், தனது வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் ஷூவை துடைத்து முத்தமிட்டுள்ளார்.

இதன் மூலம், காவல்துறைக்கு தான் வீரவணக்கம் செலுத்தி இருப்பதாக கொரண்ட்ல மாதவ் தெரிவித்தார். காவல்துறையினரை அவதூறாக பேசிய திவார் ரெட்டி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கொரண்ட்ல மாதவ் வலியுறுத்தினார்.

https://www.A1TamilNews.com

From around the web