மோடி, இந்த நாட்டிற்கு பெருங்கேடு…! #Chowkidar_Chor_Hai

குஜராத்தில் அண்மையில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைகிறார்கள். வரும் எம்.பி தேர்தலுடன் அந்த 3 தொகுதிகளிலும் சுடச்சுட இடைத் தேர்தலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம். கோவாவில், மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலை அடக்கம் கூட செய்யவில்லை. அதற்குள்ளாக அவர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிப்பு. அந்தரத்தில் தொங்கும் பாஜகவிற்கு பெரும்பான்மை பறிபோய்விடக் கூடாது என்பதே இதற்குக் காரணம். ஆனால் பாருங்கள்…. தமிழகத்தில் 15 மாதங்களுக்கும் மேலாக 20 தொகுதிகள் காலியாக
 

மோடி, இந்த நாட்டிற்கு பெருங்கேடு…! #Chowkidar_Chor_Haiகுஜராத்தில் அண்மையில் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைகிறார்கள். வரும் எம்.பி தேர்தலுடன் அந்த 3 தொகுதிகளிலும் சுடச்சுட இடைத் தேர்தலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.

கோவாவில், மறைந்த முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலை அடக்கம் கூட செய்யவில்லை. அதற்குள்ளாக அவர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிப்பு. அந்தரத்தில் தொங்கும் பாஜகவிற்கு பெரும்பான்மை பறிபோய்விடக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.

ஆனால் பாருங்கள்…. தமிழகத்தில் 15 மாதங்களுக்கும் மேலாக 20 தொகுதிகள் காலியாக இருந்தும், எதிர்க்கட்சிகள் கரடியாகக் கத்தியும் தேர்தல் ஆணையம் செத்துக் கிடந்தது. நியாயப்படி 21 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் உள்நோக்கத்தோடு 18 தொகுதிகளுக்கும் மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

இது மட்டுமா?

தமிழக அரசியல் அரங்கில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னமும், விடுதலை சிறுத்தைகளுக்கு மோதிரம் சின்னமும் மறுக்கப்படுகின்றன. குக்கரை கேட்ட தினகரனுக்கும் இதே கதிதான். ஆனால் அதிமுக, பாஜக கூட்டணியில் 1 இடம் பெற்ற ஒற்றை மனிதர் வாசன் கட்சிக்கு சைக்கிள் சின்னம் தரப்படுகிறது.

கேடுகெட்ட மத்திய அரசின் அழுத்தம் இல்லாமல் இவையெல்லாம் சாத்தியமில்லை என்பது சின்னக் குழந்தைக்குக் கூட தெரியும்.

என்னைப் பொறுத்தவரை ஒரு ஜனநாயக நாட்டின் இதயம் என்றால் ….அது தேர்தல் ஆணையம்தான். ஆணையம் சுதந்திரமாக இயங்கினால் மட்டுமே அங்கு ஜனநாயகம் நிலைத்திருக்கும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தேர்தல் ஆணையம் 100% சுயசார்புடன் இயங்கியது என வாதாட வரவில்லை. அப்போதும் அழுத்தங்கள், அத்துமீறல்கள் இருந்தன.

ஆனால் முன்னெப்போதையும் விட இப்போது எல்லாமே எல்லை மீறி போகிறது.

அதனால்தான் ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை சொல்வேன்…

மோடி, இந்த நாட்டிற்கு பெருங்கேடு…!

#Chowkidar_Chor_Hai

#MeraPM_Chor_Hai

– மணிமாறன்

From around the web