போட்டியின் இடையே 7 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வீராங்கனை!

மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் போட்டியின் இடையே தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது. லால்வென்டுலாங்கி என்ற கைப்பந்து வீராங்கனை மிசோரமில் உள்ள துய்கும் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் அணிகளுக்கான போட்டி ஒன்றின் நடுவே தனது ஏழு மாதக் குழந்தைக்கு லால்வென்டுலாங்கி தாய்ப்பால் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டது. அனைவரின் கவனத்தை ஈர்த்த அந்தப் புகைப்படம் குறித்து கேள்விப்பட்ட மிசோரம் விளையாட்டுத் துறை அமைச்சர் அந்த வீராங்கனைக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம்
 

போட்டியின் இடையே 7 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வீராங்கனை!மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் போட்டியின் இடையே தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

லால்வென்டுலாங்கி என்ற கைப்பந்து வீராங்கனை மிசோரமில் உள்ள துய்கும் அணிக்காக விளையாடி வருகிறார். உள்ளூர் அணிகளுக்கான போட்டி ஒன்றின் நடுவே தனது ஏழு மாதக் குழந்தைக்கு லால்வென்டுலாங்கி தாய்ப்பால் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டது. அனைவரின் கவனத்தை ஈர்த்த அந்தப் புகைப்படம் குறித்து கேள்விப்பட்ட மிசோரம் விளையாட்டுத் துறை அமைச்சர் அந்த வீராங்கனைக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்க முடிவுசெய்துள்ளார்.

https://www.A1TamilNews.com

 

 

From around the web