கனடாவில் தமிழ்ப்பெண்ணுக்கு மந்திரி பதவி!

தமிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசியல் வட்டாரங்களில் சில குரல்கள் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கனடா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, கனடா மந்திரிசபையில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார். கனடா நாடாளுமன்றத்திற்கு நடைப்பெற்ற தேர்தலில், 338 இடங்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும்
 

கனடாவில் தமிழ்ப்பெண்ணுக்கு மந்திரி பதவி!மிழ்நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசியல் வட்டாரங்களில் சில குரல்கள் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கனடா நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, கனடா மந்திரிசபையில் முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளார்.

கனடா நாடாளுமன்றத்திற்கு நடைப்பெற்ற தேர்தலில், 338 இடங்களுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கும், ஆண்ட்ரூ ஸ்கீர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ புதிய மந்திரிசபையை நேற்று முன்தினம் அமைத்தார். அப்படி புதிதாய் அமைக்கப்பட்ட மந்திரிசபையில், முதல் முறையாக மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் தமிழகத்தின் வேலூரைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண்.

அனிதா ஆனந்த கனடாவின் புதிய மந்திரிசபையில், பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கனடாவில் ஒரு இந்தியப் பெண் எம்.பி. மந்திரியாகி இருப்பது இதுவே முதல் முறை. கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967-ம் ஆண்டு பிறந்த அனிதா ஆனந்த், முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங்குள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாக பணியாற்றியவர் ஆவார்.

ஜான் என்ற கணவரும், 4 குழந்தைகளும் உள்ளனர். அனிதா ஆனந்த் மந்திரி ஆகி இருப்பது உலகமெங்கும் வாழும் தமிழ் பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. புதிய மந்திரிசபை குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில், “புதிய மந்திரிசபை வலுவான, திறமையான அணி ஆகும். நிறைய பணிகள் காத்திருக்கின்றன. கனடாவை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என குறிப்பிட்டிருக்கிறார்.

A1TamilNews.com

From around the web