ஆட்சியில் இல்லாத போதே இப்படி இருக்கிறார்களே! திமுக பற்றி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் கைது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான, எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை தந்தை லட்சுமிபதி திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நில விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், இமயம்குமாருடன் வந்தவர்கள் லட்சுமதிபதியும் அவருடன் இருந்தவர்களையும் அரிவாளால் தாக்கியதாகவும், தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியினால் லட்சுமதி சுட்டதாகவும்
 

ஆட்சியில் இல்லாத போதே இப்படி இருக்கிறார்களே! திமுக பற்றி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் கைது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான, எம்.எல்.ஏ இதயவர்மனின் தந்தை தந்தை லட்சுமிபதி திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் நில விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில், இமயம்குமாருடன் வந்தவர்கள் லட்சுமதிபதியும் அவருடன் இருந்தவர்களையும் அரிவாளால் தாக்கியதாகவும், தற்காத்துக் கொள்வதற்காக துப்பாக்கியினால் லட்சுமதி சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சம்பவ இடத்தில் இல்லாத போதும், எம்.எல்.ஏ. இதயவர்மன் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு இன்று அளித்துள்ள பேட்டியில், தி.மு.க. ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு அதிகம் இருந்தது.  துப்பாக்கி கலாச்சாரமும் தற்போது தி.மு.க.வில் தலைதூக்கி விட்டது.  சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது.  ஆனால், ஆட்சியில் தி.மு.க. இல்லாதபோதே இப்படி அரங்கேறுகிறது என்று கூறினார்.

A1TamilNews.com

From around the web