இன்றும் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு முதல் வாழ்த்து சொல்லும் தோழன்! யார் தெரியுமா?

ஒரே அறையில் தோழனாக வாழ்ந்தது கொடுப்பினையாக இருந்தது, தற்போது தண்டனையாக மாறிவிட்டது என்று கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளில் நினைவு கூர்ந்துள்ளார், அவருடைய நண்பர் புதுக்கோட்டை அப்துல்லா. ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு 12 மணிக்கு கவிஞர் நா.முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக வைத்திருந்த திமுக ஐடி பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் அப்துல்லா, முத்துக்குமாரின் மறைவுக்குப் பின்னும் அதே நள்ளிரவு நேரத்தில் பிறந்தநாள் வாழ்த்தை முகநூல் மூலம் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்த ஆண்டு கவிஞர் நா.முத்துக்குமாருக்கு
 

இன்றும் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு முதல் வாழ்த்து சொல்லும் தோழன்! யார் தெரியுமா?ஒரே அறையில் தோழனாக வாழ்ந்தது கொடுப்பினையாக இருந்தது, தற்போது தண்டனையாக மாறிவிட்டது என்று கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளில் நினைவு கூர்ந்துள்ளார், அவருடைய நண்பர் புதுக்கோட்டை அப்துல்லா.

ஒவ்வொரு ஆண்டும் நள்ளிரவு 12 மணிக்கு கவிஞர் நா.முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக வைத்திருந்த திமுக ஐடி பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் அப்துல்லா, முத்துக்குமாரின் மறைவுக்குப் பின்னும் அதே  நள்ளிரவு நேரத்தில் பிறந்தநாள் வாழ்த்தை முகநூல் மூலம் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு கவிஞர் நா.முத்துக்குமாருக்கு 45 வது பிறந்தநாளாகும். அதை நினைவு கூறும் வகையில் அப்துல்லா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு,

”மின்சாரக் கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்..
நம் காதல் தடைகளைத் தாண்டும்!

இந்த வரிகளுக்குச் சொந்தக்காரனுக்கு இன்று 45 ஆம் வயது பிறந்தநாள்.

கொஞ்ச காலம் அவனோடு ஒரே அறையில் தோழனாய் வாழ்ந்தது அப்போது எனக்கு குடுப்பினை..இப்போது தண்டனை!

எப்போதும் 12 மணிக்கு முதல் வாழ்த்து சொல்லும் அப்துல்லா இப்போதும் சொல்கிறேன்.. தமிழ் இருக்கும் காலமெல்லாம் வரலாற்றில் நீயும் வாழ்வாய்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முத்து.,” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார் புதுக்கோட்டை அப்துல்லா.

A1TamilNews.com

From around the web