உங்களுக்கும் பொறுப்பு இருக்கு.. ஷங்கர், கமலுக்கு லைக்கா கடிதம்!

கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் துணை இயக்குனர் உட்பட 3 பேர் பலியானார்கள். இது குறித்து லைக்கா நிறுவனத்திற்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியிருந்தார். கமலுக்கு பதிலளித்து லைக்கா நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றோம். பிப்ரவரி 19 சம்பவத்திலிருந்து இன்னும் மீளவில்லை. உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடுகளும் செய்தோம். அவர்களின் குடும்பத்திற்கு
 

உங்களுக்கும் பொறுப்பு இருக்கு.. ஷங்கர், கமலுக்கு லைக்கா கடிதம்!மல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் துணை இயக்குனர் உட்பட 3 பேர் பலியானார்கள். இது குறித்து லைக்கா நிறுவனத்திற்கு கமல் ஹாசன் கடிதம் எழுதியிருந்தார்.

கமலுக்கு பதிலளித்து லைக்கா நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“உங்களின் கடிதம் கிடைக்கப் பெற்றோம். பிப்ரவரி 19 சம்பவத்திலிருந்து இன்னும் மீளவில்லை. உயிரிழந்த 3 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடுகளும் செய்தோம். அவர்களின் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தங்களின் கடிதம் கிடைப்பதற்கு முன்பே அனைத்து உதவிகளையும் செய்தோம்.

இது உங்களின் கவனத்திற்கு வராமல் போனது துரதிர்ஷ்டவசமானது. லைக்கா நிறுவனம் உலகத்தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட நிறுவனம். இந்த விபத்து எதிர்பாராமல் நடந்தது. இதில் படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் பொறுப்பு உள்ளது. அனுபவம் வாய்ந்த மூத்த கலைஞர்களான நீங்களும், ஷங்கரும் தான் படப்பிடிப்பு தளத்தில் கேப்டன் ஆப் தி ஷிப்பாக இருந்தீர்கள்.

பாதுகாப்பு விஷயத்தில் எந்த பிரச்னையும் ஏற்பாடாது என நாங்கள் நம்பினோம். முழு படப்பிடிப்பும் உங்கள் இருவரது கட்டுப்பாட்டிலும் இருந்தது என்பதை நினைவூட்ட கடினமாக உள்ளது. இவ்வளவு பணம் போட்டு படம் எடுக்கும் நாங்கள், பாதுகாப்பு மற்றும் உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் என நீங்கள் நம்புவீர்கள் என எதிர்பார்த்தோம். இதற்காக எங்களது நிறுனவனத்தின் சார்பில் சுந்தர்ராஜன், மணிகண்டன் என்ற விமலை இருவரை நியமித்துள்ளோம்.

படப்பிடிப்பு தளத்தில் உரிய பாதுகாப்பு அளிக்கும் விதமாக அனைத்து ஊழியர்கள், கலைஞர்களுக்கும் தேசியமயமாக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்துள்ளோம். 3 பேரின் இறப்பு அந்த குடும்பத்தினருக்கு எதிர்பாராத இழப்பு. இதிலிருந்து அவர்கள் மீண்டு வரவும், அவர்களுக்கு மன தைரியத்தை கொடுக்கவும் ஆண்டவனை நாம் அனைவரும் வேண்டுவோம்.”

இவ்வாறு லைக்கா நிறுவனம் கமல் ஹாசனுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web