லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்ர். மேலும் பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எருமார்பட்டியில் உசிலம்பட்டியிலிருந்து பாறைப்பட்டி நோக்கி சென்ற லாரியும், ஜோதில்நாயக்கணூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரு பள்ளி மாணவிகள்
 

லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து; 6 பேர் பலி!துரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர்ர். மேலும் பள்ளி மாணவிகள் உள்பட 3 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எருமார்பட்டியில் உசிலம்பட்டியிலிருந்து பாறைப்பட்டி நோக்கி சென்ற லாரியும், ஜோதில்நாயக்கணூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இரு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்த சூழலில் விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்தில் உயிரிந்த ஆறு பேரில் கோடாங்கி நாயக்கன்பட்டி அசோக், ஜோதிநாயக்கணூர் முத்துலெட்சுமி, வாசியம்மாள், தாடையம்பட்டி சத்யா மற்றும் கீழப்புதூரைச் சேர்ந்த குருவம்மாள் என ஐந்து பேரின் அடையாளங்களை கண்டறிந்துள்ளனர்.

உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். 6 பேரை பலி வாங்கியுள்ள ஷேர் ஆட்டோ விபத்து உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web