சிசிடிவி வீடியோ காட்சிகள் அழிப்பு! லத்தி, மேஜையில் ரத்தக்கறை!! சாத்தான்குளம் திடுக் திடுக்!!

சாத்தான்குளம் கொலை தொடர்பான விசாரணை நேரடியாகச் சென்று நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன்,விசாரணை நடவடிக்கைகள் அனைத்தையும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, உடல்பலத்தைக் காட்டி மிரட்டும் தொனியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் இருந்தார். பதிவேடுகள் குறித்து கேட்டபோது எந்த நகர்வும் இல்லாமல் காவலர்களை ஒருமையில் குமார் அதட்டிக் கொண்டிருந்தார். கணிணியில் 1 டெர்ராபைட் ஸ்டோரேஜ் அளவு இருந்தும், காவல் நிலையத்தில் உள்ள சிசிடி காட்சிகள் தானாக
 

சிசிடிவி வீடியோ காட்சிகள் அழிப்பு! லத்தி, மேஜையில் ரத்தக்கறை!! சாத்தான்குளம் திடுக் திடுக்!!சாத்தான்குளம் கொலை தொடர்பான விசாரணை நேரடியாகச் சென்று நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன்,விசாரணை நடவடிக்கைகள் அனைத்தையும் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

உடல்பலத்தைக் காட்டி மிரட்டும் தொனியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் இருந்தார். பதிவேடுகள் குறித்து கேட்டபோது எந்த நகர்வும் இல்லாமல் காவலர்களை ஒருமையில் குமார் அதட்டிக் கொண்டிருந்தார்.

கணிணியில் 1 டெர்ராபைட் ஸ்டோரேஜ் அளவு இருந்தும், காவல் நிலையத்தில் உள்ள சிசிடி காட்சிகள் தானாக அழிந்து போகும் வகையில் திருத்தம் செய்திருக்கிறார்கள். ஜெயராஜ், பென்னிக்ஸை கைது செய்த நாளான ஜூன் 19ம் தேதி பதிவான எந்த வீடியோ காட்சிகளும் காவல் நிலைய கணிணியில் இல்லை.

காவல் நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்களை காவலர்கள் கிண்டல் செய்த காரணத்தால் சாட்சியங்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. நேரடி சாட்சியமாக இருந்த தலைமை காவலர் ரேவதி, சம்பவம் நடந்த அன்று இருவரையும் விடிய விடிய காவலர்கள் லத்தியால் அடித்ததால் லத்தி மற்றும் மேஜையில் ரத்தக்கறைகள் படிந்துள்ளது என்றார்.

காவலர்களிடம் லத்திகளை கேட்ட போது, காதில் ஏதும் விழாதது போன்று இருந்தார்கள். கட்டாயப்படுத்திய பிறகு அனைவரும் லத்திகளை அளித்தனர். அதில், மகாராஜன் என்பவர் மட்டும் “உன்னால் ஒன்னும் **** முடியாது” எனக் கூறி அசாதாரண சூழலை உருவாக்கினார். மற்றொரு காவலர் லத்தியை கேட்டபோது எகிறி குதித்து தப்பியோடிவிட்டார்.

இவை அனைத்தையும் அங்கிருந்த காவலர்கள் வீடியோவாக பதிவு செய்து நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக் கொண்டு இருந்தனர்.தலைமைக் காவலர் ரேவதியிடம் வெகு நேர பாதுகாப்புக்கு உறுதியளித்த பின்னரே சாட்சி கையெழுத்திட்டார்.

இவ்வாறு மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் அறிக்கையில் கூறியுள்ளார். 

A1TamilNews.com

From around the web