கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாபிடம் வீழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ்!

மொஹாலி: ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டு பிளிசிஸ் (96), சுரேஷ் ரெய்னா (53) ஆகியோரின் சிறந்த பேட்டிங்கால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது. பின்னர் 171 ரன்கள் அடித்தால்
 

 

மொஹாலி: ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் மொஹாலியில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் டு பிளிசிஸ் (96), சுரேஷ் ரெய்னா (53) ஆகியோரின் சிறந்த பேட்டிங்கால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இங்கினர்.

லோகேஷ் ராகுல் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 36 பந்தில் 7 பவுண்டரி, ஐந்து சிக்சர்களுடன் 71 ரன்கள் குவித்தார். கிறிஸ் கெய்ல் 28 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். பூரன் 22 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 36 ரன்கள் குவித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். பஞ்சாப் அணி 18 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

– வணக்கம் இந்தியா

From around the web