ரஹ்மான் – கமல் கூட்டணியில் தலைவன் இருக்கின்றான்…. இந்தப் படமாவது வருமா… ? 

சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது. பின்னர் லைகா தயாரிப்பில் சபாஷ் நாயுடு படம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. சில தினங்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்தப் படமும் கைவிடப்பட்டது. இந்த சூழலில் கமல் ஹாஸன் அரசியல் கட்சி தொடங்கினார்.
 

ரஹ்மான் – கமல் கூட்டணியில் தலைவன் இருக்கின்றான்…. இந்தப் படமாவது வருமா… ? சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்பு கமல் ஹாசனின் தலைவன் இருக்கின்றான் என்ற படம் இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அரசியல்வாதியின் வாழ்க்கையை மையமாக கொண்டு இப்படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.

பின்னர் லைகா தயாரிப்பில் சபாஷ் நாயுடு படம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. சில தினங்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்தப் படமும் கைவிடப்பட்டது.

இந்த சூழலில் கமல் ஹாஸன் அரசியல் கட்சி தொடங்கினார். அதே சூட்டோடு ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை அறிவித்தார். இந்தப் படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்தார். ஆனால் அந்தப் படம் நான்கே நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படியே நிற்கிறது. படம் தொடருமா, கைவிடப்பட்டதா என்று எந்த அப்டேட்டும் இல்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் லைகாதான். இந்த பட அறிவிப்பின்போதே, தேவர் மகன் 2 படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதாகவும் கமல் கூறினார்.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்ததும் கமல் ஹாஸன் பிக்பாஸ் 3 தொகுத்து வழங்கப் போய்விட்டார்.

இந்நிலையில் ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் “ ஒன் அண்ட் ஒன்லி கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து மகத்தான பணியாற்றுவதில் மகிழ்ச்சி,” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் இதனை உறுதிசெய்த கமல் ஹாசன், “உங்கள் பங்களிப்பால் எங்கள் அணியை வலுப்படுத்த உள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி. நாம் இணைந்து உருவாக்கிய படங்களில் ஒரு சில படங்களே சிறப்பானதாகவும், நன்றாகவும் வந்திருக்கின்றன. தலைவன் இருக்கின்றான் படமும் அதுபோன்ற சிறந்த படமாக இருக்கும். இந்தப்படத்தின் உற்சாகத்தின் அளவு மிகவும் பரவக்கூடிய ஒன்றாக உள்ளது. அதனை நம் குழுவின் மற்றவர்களுக்கு பரப்புகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி முடிந்த பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2000-ம் ஆண்டு வெளியான கமல் ஹாசனின் தெனாலி படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதன் பின்னர் 19 ஆண்டுகளுக்கு பிறகு தலைவன் இருக்கின்றான் படத்தில் கமல் – ரஹ்மான் இணைகின்றனர்.

இதுவரை அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள மூன்று படங்களுமே லைகா தயாரிப்பில் உருவாக இருந்தவைதான். இப்போது நான்காவதாக ஒரு படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web