‘எந்த ஷாவோ சுல்தானோ மாற்றிவிட முடியாது… வாழிய செந்தமிழ்!’ – கமலின் தில் வீடியோ

சென்னை: மிக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது சமூக வலைதள பக்கத்தில், ‘நாட்டில் அவரவர் தாய்மொழியையே பேசும் அதே நேரத்தில், இந்தியை அனைவரும் பயில வேண்டும். மக்கள் இந்தியில் பேசுவதற்கு முயல வேண்டும். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். பல்வேறு மொழிகள் இந்தியாவில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு’ என்ற கருத்தினை பகிர்ந்திருந்தார். இதற்கு நாடு
 

சென்னை: மிக சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது சமூக வலைதள பக்கத்தில், ‘நாட்டில் அவரவர் தாய்மொழியையே பேசும் அதே நேரத்தில், இந்தியை அனைவரும் பயில வேண்டும். மக்கள் இந்தியில் பேசுவதற்கு முயல வேண்டும். நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும்.

இந்தி ஒரே மொழியாக இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். பல்வேறு மொழிகள் இந்தியாவில் இருந்தாலும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்துவம் உண்டு’ என்ற கருத்தினை பகிர்ந்திருந்தார். இதற்கு நாடு முழுவதிலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் கமல் ஹாஸன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

“பல ராஜாக்கள் தங்கள் ராஜ்ஜியங்களை விட்டுக்கொடுத்து உருவானது தான் இந்தியா. விட்டுக்கொடுக்க முடியாது என உறுதியாக பல இந்தியர்கள், பல மாநிலங்கள் சொன்ன விஷயம், எங்கள் மொழியும், கலாச்சாரமும் என்பது தான். 1950ல் இந்தியா குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை எந்த ஒரு ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது ஒரு சிறிய போராட்டம், ஒரு சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் துவங்கினால் அது அதை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும். அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது.

பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை வங்காளிகளைத் தவிர. இருப்பினும் அதை சந்தோஷமாக நாங்கள் பாடிக் கொண்டிருக்கிறோம், பாடிக் கொண்டிருப்போம். காரணம் அதை எழுதிய கவிஞர் எல்லா கலாச்சாரத்திற்கும், எல்ல மொழிக்கும் தேவையான இடத்தையும், மதிப்பையும் அதில் கொடுத்திருந்தார்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து, அதைக் கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும், தயவு செய்து அதைச் செய்யாதீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ், வாழிய நற்றமிழர், வாழிய பாரதத் திருநாடு!

– இவ்வாறு கமல் ஹாஸன் கூறியுள்ளார்.

From around the web