‘அடுத்த தேர்தல்ல ஜெயிக்க ஐடியா ப்ளீஸ்…’ அரசியல் நிபுணரைச் சந்தித்த கமல் ஹாஸன்!

சென்னை: அரசியல் நிபுணர் என்று மீடியாக்களால் வர்ணிக்கப்படும் பிரசாந்த் கிஷோரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளால் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார். நகர்ப் புறங்களில் போல் கிராமப்புறங்களில் வாக்குகள் கிடைக்காததால், அதற்காக தனிகவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு குஜராத்தில் முதல்வர் பதவிக்காக பணியாற்றியது முதல் பிரசாந்த்
 

சென்னை: அரசியல் நிபுணர் என்று மீடியாக்களால் வர்ணிக்கப்படும் பிரசாந்த் கிஷோரை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த வாக்குகளால் கமல்ஹாசன் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார். நகர்ப் புறங்களில் போல் கிராமப்புறங்களில் வாக்குகள் கிடைக்காததால், அதற்காக தனிகவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தியுள்ளார். பிரதமர் மோடிக்கு குஜராத்தில் முதல்வர் பதவிக்காக பணியாற்றியது முதல் பிரசாந்த் கிஷோருக்கு அரசியல்வாதிகள் மத்தியில் வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

ஆந்திராவில் ஜெகன் ரெட்டி ஆட்சியைப் பிடிக்க பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டுதல் அணுகுமுறைதான் காரணம் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு மமதா பானர்ஜியும் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார் என்று செய்திகள் வந்தன.

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர உள்ளதால், கமல் ஹாசனின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட நகராட்சிகள், மாநகராட்சி வார்டுகள் என வெற்றி வாய்ப்பை கணித்துக் கூடுதல் கவனம் செலுத்த ஆலோசனைகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

பிக்பாஸ் மூன்றாவது பாகத்தில் பிஸியாக இருந்தாலும், அரசியல் விவகாரத்தையும் அன்றாடம் கட்சி நிர்வாகிகளிடம் விவாதித்து வருகிறார் கமல்ஹாசன் என்று அவரது கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

– வணக்கம் இந்தியா

From around the web