‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ நல்லாருக்கு… ஆனால்? – கே.எஸ்.அழகிரி கிடுக்கிப்பிடி!
சென்னை: ஐ.நா. சபையில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பிரதமர் மோடி சொன்னது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் சொன்னதைப் போல் அவர்கள் நடந்து கொள்கிறார்களா? என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது,
“ஐ.நா சபையில் பிரதமர் மோடி ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வாசகங்களைப் பேசி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழும் தமிழ் சார்ந்த தத்துவங்களும் உலகத்தில் என்றென்றும் நிலைநிற்கக் கூடியவை என்பதற்கு சான்று கனியன் பூங்குன்றனாரின் கூற்று ஆகும். அந்த வகையில் பிரதமர் மோடி ஐநா சபையில் இதைக் குறிப்பிட்டு பேசியதற்கு எனது பாராட்டுகள்.
ஆனால், இதை வெறும் வாய் வார்த்தையாக சொன்னதாக இல்லாமல் நடைமுறையிலும் செயல்படுத்த வேண்டும். பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற தத்துவத்திற்கு நேரெதிராகச் செயல்பட்டு வருகின்றார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், “நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். எங்களை எதிர்த்து நிற்பவர்கள் சுய மரியாதை இல்லாமல் செயல்பட்டு வருகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் பொதுமக்கள் அதிக வாக்குகளை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய கே.எஸ்.அழகிரி, “எங்கள் கூட்டணி சார்பில் பொய் வாக்குறுதிகளைக் கொடுப்பதில்லை இல்லை. எங்களால் செய்ய முடிந்த வாக்குறுதிகளை கொடுத்து உள்ளோம் கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் போராடி வெற்றி பெற்று வருகின்றனர். ரயில் தேர்வு மொழிகளில் தமிழ் மீண்டும் பெற்றுத்தரப்பட்டது அவர்களுடைய போராட்டத்தால் தான,” என்று குறிப்பிட்டார்.
– வணக்கம் இந்தியா