சசிகலா விடுதலையானவுடன் அதிமுகவில் நுழைகிறாரா?

சென்னை: சிறையிலிருந்து விடுதலையானதும் அதிமுகவிற்கு சசிகலா தலைமையேற்பார் என்ற தகவலுக்கு அதிமுக தரப்பில் பதிலளித்துள்ளார்கள். சிறை தண்டனைக் காலம் முடிந்து சசிகலா வந்ததும் அதிமுகவில் ஒருநாளும் புகமுடியாது என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கவிதை வடிவக் கட்டுரை வெளியாகியுள்ளது. சத்தியத்துக்கு கோட்டையும், சாத்தான்கள் நோட்டமும் என்ற பெயரில் நமது அம்மா நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது. உள்ளே இருப்பவர் வெளியே வந்து ஒன்றரை கோடி தொண்டர்கள் இயக்கத்தை தனதாக்கிக் கொள்வார் என சிலர் புரளி கிளப்பி
 

சென்னை: சிறையிலிருந்து விடுதலையானதும் அதிமுகவிற்கு சசிகலா தலைமையேற்பார் என்ற தகவலுக்கு அதிமுக தரப்பில் பதிலளித்துள்ளார்கள்.

சிறை தண்டனைக் காலம் முடிந்து சசிகலா வந்ததும் அதிமுகவில் ஒருநாளும் புகமுடியாது என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கவிதை வடிவக் கட்டுரை வெளியாகியுள்ளது. சத்தியத்துக்கு கோட்டையும், சாத்தான்கள் நோட்டமும் என்ற பெயரில் நமது அம்மா நாளேட்டில் கட்டுரை வெளியாகியுள்ளது. உள்ளே இருப்பவர் வெளியே வந்து ஒன்றரை கோடி தொண்டர்கள் இயக்கத்தை தனதாக்கிக் கொள்வார் என சிலர் புரளி கிளப்பி வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

சசிகலா வந்ததும் டிடிவி தினகரன் முதல்வராக காணும் கனவும் பலிக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அரசியல் புனிதத்தில் விஷமாக கலந்து மண்ணுளிப் பாம்பாக மறைந்திருந்து அதிமுகவை கரையானாய் அரித்தவர்கள் மீண்டும் ஒருபோதும் புகமுடியாது என்று நமது அம்மாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொண்டர்கள் கூடியும், ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைகரமாகவும் நடத்தும் அதிமுக என்ற சத்தியத்தின் கோட்டையில் சாத்தான்கள் ஒருபோதும் சரசமாட முடியாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web