ஐ.பி.எல் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10வரை நடைபெறும்! ஐபிஎல் நிர்வாகக் குழு!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில போட்டிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் ஐ.பி.எல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரை செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை துபாயில் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல்
 

ஐ.பி.எல்  செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10வரை நடைபெறும்! ஐபிஎல் நிர்வாகக் குழு!லகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சில போட்டிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மும்பையில் ஐ.பி.எல் நிர்வாகக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி தொடரை செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை துபாயில் நடத்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டி நவம்பர் 10 ம் தேதி முதல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் அட்டவணை இன்று வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப போட்டி மடும் மாலை 3.30மணிக்கு தொடங்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கு ஒவ்வொரு அணியும் 24 பேரை தேர்வு செய்து அழைத்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web